ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத் (வயது23), செய்யது இபுராகிம் (30), முகமது ரிபிக் (23), முகமது சுப்ரீத் (24), அஸ்பாக் (26) மற்றும் மணக்குடி கருப்பையா (29) ஆகியோர் காரில் ராமநாதபுரம் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக இந்த பஸ், கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் நொறுங்கியது. அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
விபத்தில் காரில் வந்தவர்களில் அப்துல் கலாம் ஆசாத், செய்யது இபுராகிம், கருப்பையா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் பலத்த காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.