கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் அமெரிக்காவிலும் மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்து வந்தார்.
மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோதி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பாரிக்கர், தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி கோவா மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
1955ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாபுசாவில் பிறந்தார் மனோகர் பாரிக்கர்.
மட்கோவில் உள்ள லயோலா உயர்நிலைப் பள்ளியில் படித்த அவர், மும்பை ஐஐடியில் உலோக பொறியியல் பட்டப்படிப்பை 1978ஆம் ஆண்டு முடித்தார்.
இந்தியாவில் ஐஐடியில் பட்டம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நபர் இவர்தான்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.