ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம்



ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 8-11, 11-7, 9-11, 11-9, 9-11, 11-9, 10-12 என்ற செட் கணக்கில் மேத்யாஸ் பிளாக்கிடம் (சுவீடன்) 1 மணி நேரம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் அரைஇறுதியை எட்டியதன் மூலம் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் சரத்கமல் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினார். 

21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா 7-11, 8-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் சாட்சுகி ஓடோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

Post a Comment

0 Comments