இந்திய தபால்துறையில், கிராமின் டக் சேவாக் என்ற பணிக்கு தமிழகத்தில் மட்டும் 4,442 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இந்த அருமையான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற கோபாலப்பட்டினம் இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மொத்த காலியிடங்கள்: 4442
பணிகள்:
கிளை தபால் அலுவலர் (BPM)
உதவி கிளை தபால் அலுவலர் (ABPM)
Dak Sevak
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் மட்டும் மொத்தம் = 4,442 காலிப்பணியிடங்கள் உள்ளன.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019
வயது:
குறைந்தபட்சமாக (15.03.2019 க்குள்) 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்:
1. BPM என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.12,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. ABPM / Dak Sevak என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.100
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவோர் தலைமை தபால் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்திலோ சென்று செலுத்தலாம்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. உள்ளூர் மொழியில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
2. குறைந்தபட்சம் 60 நாட்கள் அடிப்படை கம்யூட்டர் பயிற்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.
3. சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பிக்க தேவையானவை:
ஸ்கேன் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, கணினி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அந்த சான்றிதழ் போன்றவை அவசியம்.
மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற
www.tamilnadupost.nic.in - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.