நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் ஜவாஹிருல்லா கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். 21 தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கான இடங்களை கேட்டு திமுகவிடம் வலியுறுத்துவோம் என்றார்.
திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் தராதது வருத்தம் தருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.