சென்னையில் வசித்து வந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது மாயம்! தகவல் தெரிந்தால் தெரிவிக்க குடும்பத்தினர் வேண்டுகோள்!!



ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியபட்டினம் (எஸ்.பி. பட்டினம்) ஊரைச் சேர்ந்தவர் ராவுத்தர் நைனா முகமது (வயது 45). இவர் தற்போது குடும்பத்துடன் சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர் அருகில் வசித்து வருகிறார்.

​இந்நிலையில், கடந்த 08/08/2026 சனிக்கிழமை மதிய நேரத்திலிருந்து இவரைக் காணவில்லை. இவரைப் பல இடங்களில் தேடியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையுடனும் கண்ணீருடனும் பரிதவித்து வருகின்றனர்.

​இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது இவரைக் காண்பவர்கள் யாரேனும் இருந்தாலோ, உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு அவரது குடும்பத்தாரிடம் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
​ஆஷிக் (மைத்துனர்): 9551341166 / 7200536883
தகவல்: மௌலானா A. முஜீபுர் ரஹ்மான் பாகவி, பொதுச் செயலாளர் – சென்னை விருகம்பாக்கம் பகுதி அனைத்து மஸ்ஜிதுகள் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு)
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments