லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதேநேரம், லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேகாலயாவிலுள்ள கட்சிக்கு ஏற்கனவே, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க முடியாது என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சின்னத்தில்தான், கடந்த சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இதை ஒரு காரணமாக ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேசிய கட்சிகளுக்குதான் ஒரே மாதிரி சின்னங்கள் ஒதுக்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் சைக்கிள் சின்னத்தில் மாநில கட்சிகள் போட்டியிட முடிகிறதே என்று இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.