தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 14–ந் தேதி தொடங்கியது. இதுவரை தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வும், ஆங்கிலம் முதல் தாள் தேர்வும் நடைபெற்று முடிந்து இருக்கிறது.
இதில் தமிழ் பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர். கடந்த 20–ந் தேதி நடந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாகவே இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது.
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை பொறுத்தவரை சற்று கடினமாகவே இருந்ததாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர். பல வினாக்கள் யோசித்து பதில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், பாடப்பிரிவுகளின் உள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், இதுவரைக்கும் கேட்கப்படாத வினாக்கள் கேட்டு இருந்ததாகவும் மாணவ–மாணவிகள் வருத்தத்துடன் கூறினர்.
எஸ்.எஸ்.எல்.சி. விருப்ப பாடத்தேர்வு 23–ந் தேதியும் (சனிக்கிழமை), கணிதம் தேர்வு 25–ந் தேதியும்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.