தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சேர்க்கை பெற பெற்றோர் வரும் ஏப். 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமம், நகரப் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தில் முழுமையாகப் பயனடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கைக்கான இலக்கை ஏப்.2-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்து அது குறித்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை பள்ளியின் தகவல் பலகையில் ஏப்.10-ஆம் தேதி கண்டிப்பாக வெளியிட வேண்டும். பின்னர் இணைய வழியாக விண்ணப்பிக்கத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிமுறைகளை பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இந்தத் திட்டத்தில் பெற்றோரை அலைக்கழிக்கும் தனியார் பள்ளிகள் மீது, புகாரின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சேர்க்கை பெற பெற்றோர் வரும் ஏப். 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமம், நகரப் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தில் முழுமையாகப் பயனடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கைக்கான இலக்கை ஏப்.2-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்து அது குறித்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை பள்ளியின் தகவல் பலகையில் ஏப்.10-ஆம் தேதி கண்டிப்பாக வெளியிட வேண்டும். பின்னர் இணைய வழியாக விண்ணப்பிக்கத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிமுறைகளை பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இந்தத் திட்டத்தில் பெற்றோரை அலைக்கழிக்கும் தனியார் பள்ளிகள் மீது, புகாரின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.