மணமேல்குடி ஒன்றியத்தில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு சண்முகம் அய்யா அவர்களின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி ஒன்றியத்தில்  மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அம்மாபட்டினம் ,அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி அம்பலவானநேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி , மற்றும் பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஆறு குறுவள மையங்களில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.  இப் போட்டியினை அந்தந்த குறுவள மைய தலைமையாசிரியர்கள் தொடங்கி வைத்தனர். 

இப் போட்டியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்  கலந்து கொண்டனர். ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 3 மூன்று முதல் 5ம் வகுப்பு வரை   இரண்டாவது பிரிவாகவும் கலைத்திருவிழா அனைத்து குறுவள மையங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வண்ணம் தீட்டுதல் திருக்குறள் ஒப்புவித்தல் தேசபக்தி பாடல்கள் களிமண் பொம்மைகள் செய்தல் பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம், கதை சொல்லுதல் பாடல்கள் சொல்லுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 

 இந்நிகழ்வினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.செழியன் அவர்கள் மற்றும் திருமதி அமுதா  அவர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் பன்னீர்செல்வன் மற்றும் ஆறு குறுவள மைய தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும்  கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

குறுவள மைய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் .


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments