பலத்த மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் பகலில் வெயில் உக்கிரம் வழக்கம் போல இருந்தது. இதற்கிடையில் மாலை நேரத்தில் வானிலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்ய தொடங்கியது.
புதுக்கோட்டையில் இந்த மழையானது மாலை 5.30 மணிக்கு மேல் பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் இரவு 9 மணி வரை ஒரே சீராக பலத்த மழையாக பெய்தது. அதன்பின் மழை தூறியபடி இருந்தது. இதேபோல மாவட்டத்தில் திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை அளவு விவரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,270.60 மில்லி மீட்டர் அளவு மழைப்பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 138 மில்லி மீட்டர் அளவு மழைப்பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ஆதனக்கோட்டை-41, பெருங்களூர்-79, ஆலங்குடி-60, கந்தர்வகோட்டை-24, கறம்பக்குடி-1, மழையூர்-32.40, கீழணை-68.40, திருமயம்-116, அரிமளம்-72.40, அறந்தாங்கி-65, ஆயிங்குடி-24.40, நாகுடி-50.40, மீமிசல்-24.20, ஆவுடையார்கோவில்-24.80, மணமேல்குடி-4, இலுப்பூர்-31, குடுமியான்மலை-109, அன்னவாசல்-81.20, விராலிமலை-12, உடையாளிப்பட்டி-47, கீரனூர்-48.40, பொன்னமராவதி-8, காரையூர்-109.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.