பட்டதாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!



இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில், டெக்னிக்கல் ஆபிசர் உள்ளிட்ட 13 பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர்
2. தொழில்நுட்ப அதிகாரி
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி
4. உதவியாளர்
5. பர்சனல் அசிஸ்டெண்ட்
6. துணை இயக்குனர் உள்ளிட்ட 13 பணிகள் இதில் அடங்கும்.

காலிப்பணியிடங்கள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர் - 05
2. தொழில்நுட்ப அதிகாரி - 130
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி - 37
4. உதவியாளர் - 34
5. பர்சனல் அசிஸ்டெண்ட் - 25
6. துணை இயக்குனர் - 06

மொத்தம் = 275 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.04.2019

வயது வரம்பு:
அதிகபட்ச வயது 35 ஆகவும், ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் மாற்றங்கள் உள்ளன. வயது வரம்பில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தளர்வும் உண்டு.

தேர்வுக்கட்டணம்:
பொது / EWS / OBC - ரூ.1,000
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் / PwBD - ரூ.250

குறிப்பு:
தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

தேர்வு முறை:
1. கணினி வழித்தேர்வு
2. எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, (B.A / B.Sc / B.E / B.Tech / Law / MBA / MCA) போன்ற ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையோ அல்லது பட்டயப்படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு. பிளஸ்-டூ படித்தவர்களுக்கும் சில பணிகளுண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/60149//Instruction.html - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, https://www.fssai.gov.in/home/career.html - என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments