தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. 39 பாராளுமன்ற தொகுதிகளுடன் 18 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
21 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ஓட்டுப்பதிவு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊரில் தான் ஓட்டுரிமை உள்ளது.
இதனால் பொதுமக்கள் வசதிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்களுக்கு ஓட்டுரிமை சொந்த ஊர்களில் இருக்கும். அவர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய தேர்தலின்போது 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மக்களின் தேவைக்கேற்ப கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
21 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ஓட்டுப்பதிவு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊரில் தான் ஓட்டுரிமை உள்ளது.
இதனால் பொதுமக்கள் வசதிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்களுக்கு ஓட்டுரிமை சொந்த ஊர்களில் இருக்கும். அவர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய தேர்தலின்போது 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மக்களின் தேவைக்கேற்ப கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.