தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும்.
மீன்கள் இனப் பெருக்கம் செய்யக்கூடிய நாளாக கணக்கிடும் இந்த மாதங்களில் தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க 61 நாட்கள் தடைவிதிக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டு தமிழக விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 800 விசைப்படகு மீனவர்கள் இன்று 15/04/2019 (திங்கட் கிழமை) முதல் 14/06/2019 வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி, சிறு, சிறு பழுதுகளை சரி செய்வார்கள்.
இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். தங்கள் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்ப்பார்கள். தடை காலம் தொடங்குவதால் மீனவர்கள் வருமானம் கிடைக்காமல் அவதிப்படுவார்கள்.
விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தடைகாலம் என்பதால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும்.
மீன்கள் இனப் பெருக்கம் செய்யக்கூடிய நாளாக கணக்கிடும் இந்த மாதங்களில் தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க 61 நாட்கள் தடைவிதிக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டு தமிழக விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 800 விசைப்படகு மீனவர்கள் இன்று 15/04/2019 (திங்கட் கிழமை) முதல் 14/06/2019 வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி, சிறு, சிறு பழுதுகளை சரி செய்வார்கள்.
இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். தங்கள் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்ப்பார்கள். தடை காலம் தொடங்குவதால் மீனவர்கள் வருமானம் கிடைக்காமல் அவதிப்படுவார்கள்.
விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தடைகாலம் என்பதால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.