புதுக்கோட்டை மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பணியாளர்கள் நியமனம்: கலெக்டர் தகவல்!



நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்களின் சின்னங்களை அறிந்து கொள்ளுதல், வாக்களிக்கும் முறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு சாய்தள நடை மேடை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டதுடன் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சக்கர வண்டிகளும், இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி எளிதாக வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments