யாரையும் இழிவுபடுத்தும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது :
பொன்னமராவதி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தேன். தற்போது அந்தப் பகுதிகளில் 800 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்புடையோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதிகளில் அமைதி நிலவுகிறது. யாரையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னமராவதி வட்டத்தில் வரும் 21ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது :
பொன்னமராவதி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தேன். தற்போது அந்தப் பகுதிகளில் 800 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்புடையோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதிகளில் அமைதி நிலவுகிறது. யாரையும் இழிவுபடுத்தும் வகையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னமராவதி வட்டத்தில் வரும் 21ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.