தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் துவக்கம்



தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான இலவச சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று 22/04/2019 திங்கட்கிழமை தொடங்குவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மே 18 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலக இணையதளம் மூலமாக அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பள்ளி நிர்வாகம் ஒப்புகைச் சீட்டு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments