ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழக மின்வாரியத்தில் வேலை!



தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கேங்மேன் (ட்ரெய்னி) பணிக்கு, 5,000 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
கேங்மேன் (ட்ரெய்னி)

மொத்தம் = 5,000 காலிப்பணியிடங்கள்

பயிற்சி காலம்: 2 வருடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019
வங்கியில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 24.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - 18 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

பி.சி / எம்.பிசி பிரிவினர் - 18 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும்.

பொது பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.500

பொதுப் பிரிவினர் / பி.சி / எம்.பிசி பிரிவினர் - ரூ.1,000

ஊதியம்:
2 வருட பயிற்சிக் காலங்கள் வரை ரூ.15,000 சம்பளமாகவும், அதன் பிறகு குறைந்தபட்சம் ரூ16,400 முதல் ரூ.51,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஐந்தாம் வகுப்பு கல்வியை தமிழ் வழியில் படித்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முடியும்.
ஆன்லைனில், https://www.tangedco.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Post a Comment

0 Comments