கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியாக கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால் வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதை நம்பி சிறுமி ஆட்டோ ஓட்டுநருடன் சென்றுள்ளார். அதை அறிந்த அந்த சிறுமி, 'எங்கு கூட்டி செல்கிறீர்கள் என கூச்சல் போட்டுள்ளார். கோவிலுக்கு மாற்றுப் பாதையில் செல்கிறேன்' எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் மிரட்டியுள்ளான்.
அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் போதே தன் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து 4 பேர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ரயில்வே சாலையில் அந்த சிறுமியை இறக்கி விட்டு, அந்த கும்பல் தப்பியது. சிறுமியை தேடி அலைந்த உறவினர்கள், அவளை பார்த்து, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உண்டி ராஜா மற்றும் அவன் நண்பன் தேவா ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியாக கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால் வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதை நம்பி சிறுமி ஆட்டோ ஓட்டுநருடன் சென்றுள்ளார். அதை அறிந்த அந்த சிறுமி, 'எங்கு கூட்டி செல்கிறீர்கள் என கூச்சல் போட்டுள்ளார். கோவிலுக்கு மாற்றுப் பாதையில் செல்கிறேன்' எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் மிரட்டியுள்ளான்.
அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் போதே தன் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து 4 பேர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ரயில்வே சாலையில் அந்த சிறுமியை இறக்கி விட்டு, அந்த கும்பல் தப்பியது. சிறுமியை தேடி அலைந்த உறவினர்கள், அவளை பார்த்து, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உண்டி ராஜா மற்றும் அவன் நண்பன் தேவா ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.