புதுக்கோட்டை மாவட்ட வியாபார நிறுவனங்கள் வாக்களிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காவிட்டால் தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம்



வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத வணிக நிறுவனங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் புகார் அளிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் கு. விமலா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மக்களவைத் தேர்தலுக்காக வரும் ஏப். 18ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று அனைத்து கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இந்த நடைமுறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனத்தினர் மீது தொழிலாளர்கள் புகார் அளித்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினரின் தொடர்பு எண்கள் விவரம்:
தொழிலாளர் துணை ஆய்வாளர் கு. விமலா-  99428 32724, துணை ஆய்வாளர் எம். அறிவின் செல்வம் - 97914 74764, உதவி ஆய்வாளர் பா. குணசீலன் - 98945 74212, உதவி ஆய்வாளர் க. லட்சுமி- 97900 74164.

Post a Comment

0 Comments