கோபாலப்பட்டினம் மாணவர் Dr.S.முகம்மது ஆசிக் MBBS (டாக்டர்) பட்டம் பெற்றார்!



கோபாலப்பட்டினம் அக்ஸா 3-வது தெருவைச் சேர்ந்த, ஜனாப் EMS. செய்யது முகம்மது - ரெஜினா தம்பதியின் மகன் Dr. S.முகம்மது ஆசிக்  , திருச்சி விஷ்வனாத் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று MBBS (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.

நேற்று 06/04/2019 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்  சாரதா M.S.FAIS.,FICS அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர் S.முகம்மது ஆசிக் உட்பட அங்கு பயின்ற ஏராளமானோருக்கு எம்.பி.பி.எஸ் (டாக்டர்) பட்டச் சான்றிதழை வழங்கினார்.







மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பணியாற்றிட GPM MEDIA வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்





Post a Comment

0 Comments