கோபாலப்பட்டினம் Al Hamas அணியினரால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!



கோபாலப்பட்டினம் GPM Al Hamas அணியினரால் நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 01/05/2019  02/05/2019 மற்றும் 03/05/2019 ஆகிய மூன்று தினங்கள் கோபாலப்பட்டினம் கீரின் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.

முதல் நாளில் முதல் தகுதி சுற்று மற்றும் இரண்டாம் தகுதி சுற்று நடைபெற்றது.

இறுதி நாளில்  மூன்றாவது தகுதி சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.




இதில்   கோபாலப்பட்டினம் ஜமாஅத் தலைவர் ASM செய்யது முகம்மது அவர்கள், கோபாலப்பட்டிணம் ஜமாத் துணை தலைவர் ராஜா முகம்மது, ஜமாத் நிர்வாகிகள்  மற்றும் திரு. இராமசாமி M.A மாவட்ட தலைவர்  மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் CBSE பள்ளிகள் சங்கம் புதுக்கோட்டை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  இறுதி போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.

இதில் முதல் பரிசை  தொண்டி Al - Hilal அணியும்,


இரண்டாவது பரிசை  கோபாலப்பட்டினம் Al - Hamas அணியும்


மூன்றாவது பரிசை  கரூர் அணியும்


பரிசுகளை வெற்றி பெற்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் AL - HAMAS அணியினர் ,  கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், இளைஞர்கள் கோபாலப்பட்டிணம் கிரிக்கெட் அணிகள், மற்றும் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர்.

தகவல் &  மீடியா செய்திகளுக்காக : AL Hamas அணி வீரர்கள்

Post a Comment

0 Comments