புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1ம் வகுப்பு முதல் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 2019-20ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அனுக வேண்டும்.
மேலும் 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், முந்தைய வகுப்பில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் (மதிப்பெண் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்) மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் என்ற முகவரிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1ம் வகுப்பு முதல் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 2019-20ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அனுக வேண்டும்.
மேலும் 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், முந்தைய வகுப்பில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் (மதிப்பெண் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்) மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் என்ற முகவரிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.