புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறுவதற்கு  மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம், மாற்றுத் திறனாளியின் கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து விவரங்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதேசமயம், மாற்றுத் திறனாளியின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கீழ்கண்ட ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேதி வாரியாக நடத்தப்படுகிறது.

முகாம் நடைபெறும் இடங்கள்: 

ஜூலை16 - அன்னவாசல்,

ஜூலை17 - குன்றாண்டார்கோவில்,

ஜூலை18 - திருமயம்,

ஜூலை 19 - விராலிமலை,

ஜூலை 23 -  பொன்னமராவதி,

ஜூலை 24 - அரிமளம்,

ஜூலை 25 - மணமேல்குடி,

ஜூலை 26 - ஆவுடையார்கோவில்,

ஜூலை 30 - அறந்தாங்கி,

ஜூலை 31 - திருவரங்குளம்

மற்றும்  ஆகஸ்ட்  1 -  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

நன்றி: தினமணி

Post a Comment

0 Comments