கோபாலப்பட்டினம் ஊர் மக்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!!!



இந்தியாவில் துல்ஹஜ் பிறை 10 அன்று (12/06/2019) பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஹஜ் பெருநாள் 12/08/2019 அன்று திங்கள்கிழமை கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானத்தில் காலை 6.30 மணிக்கு பயான் ஆரம்பிக்கப்பட்டு  மிகச்சரியாக 7.00 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் பிறகு குத்பா உரை, தூஆக்கள் செய்யப்பட்டது.

இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் என ஏறாளமானோர் கலந்து கொண்டு கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானத்தில் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி  கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும்.































Post a Comment

0 Comments