நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி வழுக்கி விழுந்து உள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்திய பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இது மீளத் தக்கது எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு வாரங்களாக புதிதாக பட்ஜெட் அறிவிப்பு போல பல நிதி நிலை அறிவிப்புகளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்து வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை அடுத்த காலாண்டு இறுதியில்தான் பார்க்க வேண்டும்.
நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், நீண்ட கால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் நாம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்திய பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இது மீளத் தக்கது எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு வாரங்களாக புதிதாக பட்ஜெட் அறிவிப்பு போல பல நிதி நிலை அறிவிப்புகளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்து வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை அடுத்த காலாண்டு இறுதியில்தான் பார்க்க வேண்டும்.
நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், நீண்ட கால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் நாம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.