கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சவுதி அரேபியா இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைக்கப் பட்டன.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சவுதி அரேபியா ஜித்தா தமிழ்ச்சங்கம் இணைந்து முன்னெடுத்து உருவாக்கிய குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு விழா,மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைப்பு திருவிழா நீடாமங்கலம் அடுத்த கானூர் ஊராட்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவனர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது.
கிரீன் நீடா நகர அமைப்பாளர் கே.ஜானகிராமன் வரவேற்றார். பூவனூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் விசு.அண்ணாதுரை, ஜித்தா தமிழ்ச்சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் ரஃபியா, விஜயன், அப்துல் அஜீஸ், கிரீன் நீடா அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் இராம.கந்தசாமி, கானூர் கிராம முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், நவநீதம் முன்னிலை வகித்தனர்.
குளத்தினை பொதுமக்களுக்கு அர்பணித்து, 2000 பனை விதைகளை விதைத்து மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், குடிமராமத்துப்பணிகளை ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே தொடங்கி முடித்திட வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மராமத்துப்பணிகள் சரிவர நடைபெறவில்லை. அரசின் திட்டங்கள் சரியான முறையில் செய்யப்படுகிறதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும், பஸ் டிக்கெட் எடுத்தால் கூட அதிலும் நம் வரிப் பணம் செல்கிறது, நமது வரிப்பணத்தில் நடக்கும் அரசு திட்டப்பணிகளில் ஊழல் நடக்காமல் இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும், மாற்றம் நாம் வசிக்கும் தெருவில் இருந்தே தொடங்க வேண்டும் மாணவர்களால் முடியாதது ஒன்றுமே இல்லை. ஊர் மீது நாம் பற்றுள்ளவராக இருக்க வேண்டும், எனது இன்ஸிலலில் வரும் டி தளிக்கோட்டையை குறிக்கிறது, அனைவரும் தங்கள் தந்தை பெயருக்கு முன்னால் ஊர் பெயரை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். நிகழ்வில் ஹோப் லேர்னிங் மாணவர்கள் 50 பேர்கள், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பனை விதைகளை விதைத்தார்.
விழாவில் தொழிற்சங்க தலைவர் ஜெ.குணசேகரன், நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ஆர்.ராஜாராமன், மன்னார்குடி நேசக்கரம் தலைவர் ஆர்.வி.ஆனந்த், பசுமை கரங்கள் தலைவர் ஆர்.கைலாசம், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரன், மகிழங்காடு மக்கள் மன்ற தலைவர் ச.மலர்மன்னன், பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிப்பாளர் பசுமை எட்வின், கிரீன் நீடா தஞ்சாவூர் அமைப்பாளர் சண்முக வடிவேலன், பூண்டி அமைப்பாளர் வில்லியம் ஸ்டீபன்சன், ஹோப் சென்டர் ஒருங்கிணைப்பாளர் நாகராணி உள்ளிட்டோர் பேசினர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சவுதி அரேபியா ஜித்தா தமிழ்ச்சங்கம் இணைந்து முன்னெடுத்து உருவாக்கிய குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு விழா,மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைப்பு திருவிழா நீடாமங்கலம் அடுத்த கானூர் ஊராட்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவனர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது.
கிரீன் நீடா நகர அமைப்பாளர் கே.ஜானகிராமன் வரவேற்றார். பூவனூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் விசு.அண்ணாதுரை, ஜித்தா தமிழ்ச்சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் ரஃபியா, விஜயன், அப்துல் அஜீஸ், கிரீன் நீடா அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் இராம.கந்தசாமி, கானூர் கிராம முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், நவநீதம் முன்னிலை வகித்தனர்.
குளத்தினை பொதுமக்களுக்கு அர்பணித்து, 2000 பனை விதைகளை விதைத்து மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், குடிமராமத்துப்பணிகளை ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே தொடங்கி முடித்திட வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மராமத்துப்பணிகள் சரிவர நடைபெறவில்லை. அரசின் திட்டங்கள் சரியான முறையில் செய்யப்படுகிறதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும், பஸ் டிக்கெட் எடுத்தால் கூட அதிலும் நம் வரிப் பணம் செல்கிறது, நமது வரிப்பணத்தில் நடக்கும் அரசு திட்டப்பணிகளில் ஊழல் நடக்காமல் இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும், மாற்றம் நாம் வசிக்கும் தெருவில் இருந்தே தொடங்க வேண்டும் மாணவர்களால் முடியாதது ஒன்றுமே இல்லை. ஊர் மீது நாம் பற்றுள்ளவராக இருக்க வேண்டும், எனது இன்ஸிலலில் வரும் டி தளிக்கோட்டையை குறிக்கிறது, அனைவரும் தங்கள் தந்தை பெயருக்கு முன்னால் ஊர் பெயரை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். நிகழ்வில் ஹோப் லேர்னிங் மாணவர்கள் 50 பேர்கள், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பனை விதைகளை விதைத்தார்.
விழாவில் தொழிற்சங்க தலைவர் ஜெ.குணசேகரன், நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ஆர்.ராஜாராமன், மன்னார்குடி நேசக்கரம் தலைவர் ஆர்.வி.ஆனந்த், பசுமை கரங்கள் தலைவர் ஆர்.கைலாசம், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரன், மகிழங்காடு மக்கள் மன்ற தலைவர் ச.மலர்மன்னன், பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிப்பாளர் பசுமை எட்வின், கிரீன் நீடா தஞ்சாவூர் அமைப்பாளர் சண்முக வடிவேலன், பூண்டி அமைப்பாளர் வில்லியம் ஸ்டீபன்சன், ஹோப் சென்டர் ஒருங்கிணைப்பாளர் நாகராணி உள்ளிட்டோர் பேசினர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.