புதுக்கோட்டையில் மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இங்கு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர் ஒருவர் ‘ரெக்கார்டு’ நோட்டு எழுதாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் அந்த மாணவரை ஆசிரியர் அருளானந்தம் என்பவர் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதில் மாணவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாத மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து மாணவரின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணியிடை நீக்கம்
இதுபற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி ராகவனை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, துறைரீதியான விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஆசிரியர் மாணவரை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் அருளானந்தம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தாளாளருக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் அருளானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இங்கு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர் ஒருவர் ‘ரெக்கார்டு’ நோட்டு எழுதாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் அந்த மாணவரை ஆசிரியர் அருளானந்தம் என்பவர் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதில் மாணவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாத மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து மாணவரின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணியிடை நீக்கம்
இதுபற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி ராகவனை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, துறைரீதியான விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஆசிரியர் மாணவரை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் அருளானந்தம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தாளாளருக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் அருளானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.