தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி, டிசம்பர், 2ல் அறிவிக்கப்படும் என்றும், டிச.13க்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும், மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக பதில் அளிக்குமாறு, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின், ஜூலை 15-ல், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் காரணமல்ல. லோக்சபா தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழலால்தான், உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது'.
'இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை, மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு, 60 நாள்கள் தாமதமாகும்; எனவே, தேர்தலை நடத்த, அக்டோபர், 31 வரை அவகாசம் தேவை' என, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு, ஜூலை 17-ல், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில், இடைக்கால மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்ய வேண்டிய 'பெல்' எனப்படும், பாரத் மின்னியல் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் இருப்பதால், அங்கு தேர்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு, அக்டோபர், 28ல் திரும்புவார்கள் என்று 'பெல்' நிறுவனத்தின் உயரதிகாரி, கடிதம் மூலம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, மேலும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்கவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்' என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக பதில் அளிக்குமாறு, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின், ஜூலை 15-ல், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் காரணமல்ல. லோக்சபா தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழலால்தான், உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது'.
'இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை, மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு, 60 நாள்கள் தாமதமாகும்; எனவே, தேர்தலை நடத்த, அக்டோபர், 31 வரை அவகாசம் தேவை' என, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு, ஜூலை 17-ல், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில், இடைக்கால மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்ய வேண்டிய 'பெல்' எனப்படும், பாரத் மின்னியல் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் இருப்பதால், அங்கு தேர்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு, அக்டோபர், 28ல் திரும்புவார்கள் என்று 'பெல்' நிறுவனத்தின் உயரதிகாரி, கடிதம் மூலம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, மேலும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்கவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்' என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.