கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடற்கரை பகுதியில் வலை பின்னும் கூடம் கட்டுமான பணி துவங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் இருந்து சுமார் 50- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவுலியா நகர் பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து அந்த பகுதியில் சிறு ஓட்டு கொட்டைகை அமைத்து அதில் வைத்து வலை பின்னுவது மற்றும் தூண்டில் அடுக்குவது போன்ற பணிகளை செய்து வந்தனர்.
இதனிடையே சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் மூலம் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனமும் இணைந்து புதிய வலை பின்னும் கூடம் அவுலியா நகர் கடற்கரை பகுதியில் நேற்று 25.11.2019 திங்கள்கிழமை அன்று கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் ஜமாத் துணைத்தலைவர், நிர்வாகிகள், மீனவர் சங்கத் தலைவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.