கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் மழை..!



கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் கோபாலப்பட்டிணம் கடற்கரை தோப்பு செல்லும் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும்  VIP நகர்  பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மேலும், நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இத்தொடர் மழையின் காரணமாக கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


கனமழையின் காரணமாக, கோபாலப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



புகைப்படம் உதவி: சாதிக் பாட்சா, சென்னை மொபைல்ஸ், மீமிசல்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments