அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த விவசாயிக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 38). விவசாயியான இவர், கடந்த 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கீரமங்கலத்திற்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி சாலையிலேயே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், துப்புரவு பணியாளர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இது ெதாடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியானது.
பணியிட மாற்றம்
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடிவில், கார்த்தீபனுக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, முதற்கட்டமாக துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர் மற்றும் பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கார்த்தீபனின் உறவினர்கள் கூறுகையில், பணி நேரத்தில் டாக்டர்கள், செவிலியர்கள். உதவியாளர்கள் தான் தையல் போட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளரை தையல்போட சொல்லிவிட்டு அலட்சியமாக இருந்த டாக்டர் மற்றும் அலுவலர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 38). விவசாயியான இவர், கடந்த 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கீரமங்கலத்திற்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை பார்த்து திடீரென பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி சாலையிலேயே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், துப்புரவு பணியாளர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இது ெதாடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியானது.
பணியிட மாற்றம்
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடிவில், கார்த்தீபனுக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, முதற்கட்டமாக துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர் மற்றும் பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கார்த்தீபனின் உறவினர்கள் கூறுகையில், பணி நேரத்தில் டாக்டர்கள், செவிலியர்கள். உதவியாளர்கள் தான் தையல் போட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளரை தையல்போட சொல்லிவிட்டு அலட்சியமாக இருந்த டாக்டர் மற்றும் அலுவலர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.