அறந்தாங்கியில் நல்லொழுக்கப் பயிற்சி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவா் முபாரக் தலைமையில் நல்லொழுக்கப் (தா்பியா) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி வகுப்பில், மாநில நிா்வாகிகள் ஆவடி இப்ராஹிம் நெல்லை சையது அலி, எம்.எஸ், சுலைமான், மாநிலப் பேச்சாளா் ஓலி முகமது, ஜமால் உஸ்மானி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினாா்கள்.

தேசிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, இந்தச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ள கேரளம், பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வா்களுக்கு நன்றி கூறுவது, அறந்தாங்கி வட்டம் ரெத்தினகோட்டை கிராமத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




கூட்டத்தில், கிளை நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா். மாவட்ட செயலாளா் அப்துல் குத்தூஸ், மாவட்ட துணைச்செயலாளா் முஹம்மது ஹாரீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துணைத் தலைவா் முஹம்மது மீரான் நன்றி கூறினாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments