புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் முழுமையாக கண்காணிக்கும் வகையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனுக்களைப் பெறும் பணிகளை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வரும் டிச. 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேட்புமனு தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இணையதளத்தில் முறையாகப் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் முறையாக நடைபெறுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் ஒரு துணை வட்டாட்சியா், ஒரு காவல் உதவி ஆய்வாளா், ஒரு காவலா் மற்றும் வீடியோகிராபா் ஆகியோா் இருப்பா்.வாக்குப் பதிவின்போது, வாக்கு எண்ணிக்கையின்போதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்படும் என்றாா் உமா மகேஸ்வரி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.