இளையான்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு பிரிவில் பல லட்சம் ரூபாய் செலவில் செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 6 மாதங்களாக பழுதாகி கிடப்பதால் அந்த பிரிவில் உள்ள நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடப்பதால் நோயாளிகள் உள்ளே செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் தற்போது காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ராவுத்தர் நயினார் 48 கூறுகையில்:
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், சித்தா டாக்டர், மருந்தாளுநர் பணியிடங்கள் நீண்ட வருடங்களாக காலியாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் இல்லாததால் மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்றார்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு பிரிவில் பல லட்சம் ரூபாய் செலவில் செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 6 மாதங்களாக பழுதாகி கிடப்பதால் அந்த பிரிவில் உள்ள நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடப்பதால் நோயாளிகள் உள்ளே செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் தற்போது காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ராவுத்தர் நயினார் 48 கூறுகையில்:
இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், சித்தா டாக்டர், மருந்தாளுநர் பணியிடங்கள் நீண்ட வருடங்களாக காலியாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் இல்லாததால் மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.