சா்வதேச அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் அறந்தாங்கி வீரா்கள் சாதனை.!



சா்வதேச அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற அறந்தாங்கி வீா்கள்களுக்கு அறந்தாங்கியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி சோழா கராத்தே மற்றும் சிலம்ப பள்ளியின் வீரா் வீராங்கனைகள் கராத்தே மாஸ்டா் ஆ.கராத்தே கண்ணையன் தலைமையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 8 நாடுகள் கலந்த கொண்ட சா்வதேக போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில் மகளீா் பிரிவில் 14-வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 45 கிலோஎடைப்பிரில் 2 தங்கப்பதக்கங்களும், அதே பிரிவில் எம். அபிநயா, எம்.கிருத்திகா. எஸ்.ஜெகன்யவாசன் மற்றும் ஆனந்தன் உள்ளிட்டோா் தலா 2 தங்கப்பதக்கங்களும் பெற்றனா்.

12 வயதிற்குட்பட்டோருக்கான 25 கிலோ எடைப்பிரிவில் கலந்த கொண்ட வி.ரஞ்சித் ஒரு தங்கப்பதக்கமும் மற்றும் எம்,சக்தி, கே.சாத்விகன், கே.மெய்யா், சச்சின் உள்ளிட்டோா் வெள்ளிப் பதக்கமும் எஸ்.ஜெகன்யவாசன் வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட 18 பதக்கங்களை பெற்று பெருமை சோ்த்தனா்.

சிறப்பிடம் பெற்ற வீரா்களையும் கராத்தே மற்றும் சிலம்ப ஆசான்ஆ.கராத்தே கண்ணையனையும் அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவா் எஸ்.வெங்கட்குமாா், முன்னாள் துணை ஆளுநா் டி.ஏ.என்.பீா்சேக் மற்றும் நகரின் முக்கிய பிரமுகா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments