10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாதிரி வினாத்தாளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 10,11 மற்றும் 12ஆம் பொதுத்தேர்விற்கு Blue Print எனப்படும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் எந்த பக்கத்திலிருந்தும் பாடம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள் என்பது வினாத்தாள் வடிவமைப்பு, அதன் பிரிவுகள், மதிப்பெண் ஒதுக்கீடு பற்றி அறிந்து கொள்ளவதற்காகத்தான் என்றும், மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்களை தேர்வில் கேட்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனவும் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மாதிரி வினாத்தாள்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது என்பதும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.