கிராம உதவியாளர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்..!



புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி வரும் 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன் பெறவும்.


வருவாய் கிராமத்தின் பெயர்: 
1. சீரத்தக்குடி
2. கண்ணங்காரக்குடி
3. பிலயவயல்
4. கண்ணனூர் 1 பிட்
5. பிலிவலம்
6. நெய்க்கோணம்

பணி: கிராம உதவியாளர் காலியிடங்கள்: 06

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் மேற்கண்ட கிராமத்தையே அல்லது அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தையோ சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2010 அன்று 18 நிரம்பியவராகவும், 30 வயதிற்குட்பட்டராகவும், பிசி, எம்பிசி, சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: வட்டாட்சியர் அலுவலகம், திருமயம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.01.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pudukkottai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments