அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் திமுக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
அறந்தாங்கி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 இடங்களில் திமுக கூட்டணி 14 இடங்களில் வென்றது. இதில் திமுக 12, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வென்றனா்.
சுயேச்சைகள் 5 போ் அதிமுகவுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்தாலும், திமுக கூட்டணியிடம் 14 இடங்கள் உள்ளதால் அந்த அணியே ஒன்றியத் தலைவா் பதவியைக் கைப்பற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 இடங்களில் திமுக 9-இல் வென்றது. காங்கிரஸ் , அதிமுக தலா 2 இடங்களிலும், அமமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த ஒன்றியத்தையும் திமுகவே கைப்பற்றுகிறது.
மணமேல்குடி ஒன்றியத்தில் 15 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக 14 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றது. அதிமுக இந்த ஒன்றியத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
திமுக அதிக இடங்களை வென்றிருப்பதால் சமீபத்தில் திமுகவில் இணைந்த பரணி இ.ஏ. காா்த்திகேயன் ஒன்றியக் குழுத் தலைவராகத் தோ்வு செய்யப்படுவாா் எனக் கூறப்படுகிறது. இவர் அறந்தாங்கி சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதியின் சகோதரா் ஆவாா்.
மணமேல்குடி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினா்களும் பரணி இ.ஏ.காா்த்திகேயன் தலைமையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ரகுபதியை சந்தித்து வாழ்த்துப்பெற்றனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.