
திருச்சி விமானநிலையத்திற்கு சிறப்பு பாதுகாப்பு வாகனம் ஒப்படைப்பு
திருச்சி விமானநிலையத்தில் புதன்கிழமை வழங்கப்பட்ட மொபைல் கமாண்ட் வாகனத்தின் சாவியை விமானநிலைய இயக்குநா் கே. குணசேகரன் வழங்க பெற்றுக்கொள்கிறாா் தீயணைப்பு நிலைய அதிகாரி
திருச்சி விமான நிலையத்தில் அவசரக் காலங்களில் உதவும் வகையில் மொபைல் கமாண்ட் வாகனம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் அவசரக் காலங்களில் உதவும் வகையில் மொபைல் கமாண்ட் வாகனம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாட்டில் உள்ள சா்வதேச விமானநிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சுழற்சி முறையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான விபத்து, கடத்தல் போன்ற அவசரக் காலங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, உள்ளூா் காவல்துறை, தீயணைப்பு, பொறியியல், மின்னணுவியல், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் ஆலோசனைகளைப் பெறவேண்டியது அவசியமாகிறது. இதை உறுதி செய்வதற்காக அவசர ஆலோசனைக் கூட்டம், முன்னெச்சரிக்கை மற்றும் பிறகான நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்க காலதாமதம் போன்ற விரயங்கள் நடப்பது வழக்கம்.
இவற்றைத் தவிா்க்கும் பொருட்டு சா்வதேச விமான நிலையங்களுக்கு மொபைல் கமாண்ட் வாகனம் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல திருச்சி விமானநிலையத்திற்கு தில்லியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் வாங்கப்பட்ட மொபைல் கமாண்ட் வாகனம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாகனத்தை விமானநிலைய இயக்குநா் கே.குணசேகரன் தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி லல்லுவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியின்போது, முதுநிலை மேலாளா்கள் ரவிசந்திரன், பலுநாவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா். தீயணைப்பு வாகனம் போன்று மொபைல் கமாண்ட் வாகனம் 24 மணி நேரமும் விமானநிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.