ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டியில் வருகிற 13-ந் தேதி தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மைய அரங்கில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயலும் மத்திய அரசை கண்டித்தும், விளை நிலத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, மத்திய சுற்றுசூழல் துறையின் அனுமதி தேவையில்லை, சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் கருத்து கேட்டு கூட்டங்கள் நடத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியில், நெடுவாசல் உள்ளிட்ட பகுதி மக்களையும், மாவட்ட விவசாயிகளும் ஒன்று திரட்டி தொடர் முழக்க போராட்டம் நடத்துவது, தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த தனபதி, மிசா.மாரிமுத்து, விடுதலைக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சோமையா வரவேற்றார். முடிவில் ராமையா நன்றி கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.