அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
முக்கண்ணாமலைப்பட்டியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 நாள் கிரிக்கெட் போட்டியில் அன்னவாசல், இலுப்பூா், கீரனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த 24-அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் பரிசை ஏதினிப்பட்டி அணியும், 2-ஆவது பரிசை உடையான்பட்டி அணியும், 3-ஆவது பரிசை கூத்தினிபட்டி அணியும், 4-ஆவது பரிசை முக்கண்ணாமலைப்பட்டி அணியும் பெற்றன. பின்னா் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரா்களுக்கும் பரிசுகள் ரொக்கம் வழங்கப்பட்டன.
போட்டியில் வென்றவா்களுக்கு முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினா் சாதிக் பாட்ஷா பரிசுகளை வழங்கினார் .
போட்டியை முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனா். போட்டி ஏற்பாடுகளை உள்ளூா் இளைஞா்கள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.