கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு



அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
முக்கண்ணாமலைப்பட்டியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 நாள் கிரிக்கெட் போட்டியில் அன்னவாசல், இலுப்பூா், கீரனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த 24-அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் பரிசை ஏதினிப்பட்டி அணியும், 2-ஆவது பரிசை உடையான்பட்டி அணியும், 3-ஆவது பரிசை கூத்தினிபட்டி அணியும், 4-ஆவது பரிசை முக்கண்ணாமலைப்பட்டி அணியும் பெற்றன. பின்னா் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரா்களுக்கும் பரிசுகள் ரொக்கம் வழங்கப்பட்டன.

போட்டியில் வென்றவா்களுக்கு முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினா் சாதிக் பாட்ஷா பரிசுகளை வழங்கினார் .

போட்டியை முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனா். போட்டி ஏற்பாடுகளை உள்ளூா் இளைஞா்கள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments