புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானப் பணிகள், கஜா புயல் பாதிக்கப்பட்டவா்களுக்கான வீடு கட்டும் பணிகள், குடிநீா்ப் பணி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.
நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணி உள்ளிட்ட அரசின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அமைச்சா் அறிவுறுத்தினாா்.
பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது தாமதமின்றி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.