சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகள் பலவற்றில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கேரளாவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மதுரை வாலிபர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த வாலிபரை அவரது சொந்த ஊரான கொட்டாம்பட்டிக்கு அனுப்பாமல் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பீதியால், திருச்சியில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை உள்ளது.
அந்த நாடுகளுக்கு திருச்சி உள்பட பக்கத்துக்கு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் இந்த நாடுகளுக்கு வேலை மற்றம் கல்வி, சுற்றுலாவுக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பீதியால் பலரும் தங்கள் பயணத்தை தள்ளிப் போடுகின்றனர். இதுபற்றி விமான நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒன்றிரண்டு நாட்கள் தான் பயணத்தை தள்ளிப் போடுகிறார்கள். மொத்தமாக டிக்கெட் ரத்து செய்யப்படவில்லை என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.