சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளி உடலை தாயகத்திற்கு அனுப்பிவைத்த ரியாத் தமுமுக.!



கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் தாலுகா, பரங்கிப்பேட்டை, பெரியபட்டு அருகில் உள்ள சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சின்னதம்பி என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள Al Marshad Group Contract கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். ஜனவரி 17 அன்று உயர் இரத்த அழுத்தம் அதிகமான காரணத்தால் மாரடைப்பால் தனது அறையிலேயே பெருமாள் உயிரிழந்தார்.


அவரின் தம்பி சண்முகம் தமுமுக ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணை செயலாளர் கோபாலப்பட்டிணம் முகம்மது ரிஸ்வான் அவர்களை தொடர்பு கொண்டு உதவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

தகவல் சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டது.

தகவலைப் பெற்றுக்கொண்ட அப்துல் ஹமீது அவர்கள் விரைந்து செயல்பட்டு எதிஹாத் விமானம் மூலமாக துபாய் வழியாக 04.02.2020 செவ்வாய்க்கிழமை மாலை 3:30 மணியளவில் அவரது மகன் தினேஷ் அவர்களும் பெருமாள் அவர்களின் பிரேதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று 05.02.2020 புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றடைந்தது.

செங்கல்பட்டு வடக்கு மருத்துவ அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் தாம்பரம் மருத்துவ அணி செயலாளரும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனருமான அலாவுதீன் விமானநிலைய அனைத்து உதவிகளையும் செய்து சென்னையிலிருந்து சமுதாய தனவந்தரகளின் உதவியால் தமுமுக-தாம்பரம் ஆம்புலன்ஸ் மூலமாக சிலம்பிமங்கலத்திற்கு எடுத்துச் சென்று கடைசிவரை இருந்து உதவினர்.

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி உதவிய தமுமுக-வினரை தினேஷ் மற்றும் பெருமாள் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

தகவல்:
என்றென்றும் மனிதநேய பணியில்:
தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவுதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments