முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்..!!



குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தும் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை (10-02-2020) அன்று நடைபெற உள்ளது.

மேலும் முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொணடனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments