ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் இயற்கையாகவே கடல் அலைகள் வேகமாகவும் நீரோட்டம் அதிகமாகவும் உள்ள பகுதியாகும்.தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகத்தாலும் அரிச்சல்முனை கடற்கரை சாலையில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் நடை பாதையும்,படிக்கட்டுகளும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பல இடங்களில் சேதமடைந்தன. பின்னர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடி வரும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை அனுமதிக்க காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அரிச்சல்முனை சாலை வளைவுக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் போலீசாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் 1 கிலோ மீட்டருக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்படுவதால் அங்கிருந்து தினம் தினம் சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும், முதியவர்களும் அரிச்சல்முனை சாலை வரை நடந்து சென்று வருகின்றனர்.ஏராளமான வாகனங்கள் வருவதால் திரும்பமுடியாமலும்,வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி அடைவதுடன் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
எனவே அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவு வரை வழக்கம்போல் சென்றுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரிச்சல்முனை சாலை வளைவு பகுதியை ஒட்டியுள்ள சேதமான தடுப்புச் சுவர் பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் வாகனங்கள் சென்று திரும்பி வருவதால் எந்த ஒரு பாதிப்பும் வராது, போலீசார் தான் வாகனங்களை அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.