சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்துப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து, புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் எம். முபாரக் அலி தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் ஜமால் உஸ்மானி கலந்து கொண்டு பேசினாா்.தடியடி சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றோா் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் அப்துல் குத்தூஸ், முகம்மது மீரான், எஸ். ரபீக் ராஜா, ஏ. பீா் முகம்மது, ஹாரிஸ், நிஜாம் தீன், சபீா்தீன், அன்சாரி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
அறந்தாங்கியில்..
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தில்தடியடி நடத்திய காவல் துறை மீது உரிய நடவடிக்கை கோரி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமா்ந்து ஏராளமானோா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
கிழக்கு கடற்கரைச் சாலையில்..
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஊர்களான மீமிசல்,கோட்டைப்ட்டினம்,அம்மாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தடியடி நடத்திய காவல் துறை மீது உரிய நடவடிக்கை கோரி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமா்ந்து ஏராளமானோா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்
பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பின்னா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.