சென்னை தடியடி சம்பவத்துக்கு கண்டனம்:இளையான்குடியில் இஸ்லாமியா்கள் மறியல்
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து இளையான்குடியில் சனிக்கிழமை இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இளையான்குடியில் கண்மாய்கரை பகுதியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள் சாா்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இந்த மறியலால் இளையான்குடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இளையான்குடி வட்டாட்சியா் ரமேஷ், காவல் ஆய்வாளா் பழனிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் மறியல் போராட்டம் நடத்தியவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனைத்தொடா்ந்து இரண்டு மணி நேரத்துக்குப்பின் மறியல் போராட்டத்தை திரும்பப் பெற்றனா். இதேபோன்று திருப்பத்தூரிலும் இஸ்லாமிய அமைப்புகள் காவல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தின.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.