இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது



இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள், எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு 

படகின் உரிமையாளர்:

ஆறுமுகம் என்பவரின் மகன் சின்ன அடைக்கலம்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்:

வையாபுரி என்பவரின் மகன் சின்னபாண்டி, சின்னபாண்டி என்பவரின் மகன் மணிகண்டன், பிச்சை என்பவரின் மகன் அந்தோணி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments